ஐந்து மாநில இடைத்தேர்தல்: நான்கு இடங்களில் பாஜக வெற்றி

ஐந்து மாநில இடைத்தேர்தல்: நான்கு இடங்களில் பாஜக வெற்றி

1 mins read
147a561f-b434-4dee-8d64-9d37ae715399
ஐந்து மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டன. - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களில் உள்ள ஏழு தொகு​தி​களுக்கு நடைபெற்ற இடைத்தேர்​தல் முடிவு​கள் திங்கட்கிழமை (மே 4) வெளி​யா​யின.

கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு தேதிகளில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ஆம் தேதி நடைபெற்றது.

அத்துடன், வேறு ஐந்து மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் அதே நாளில் எண்ணப்பட்டன.

இடைத்தேர்​தலில் நான்கு தொகு​தி​களில் பாஜக வெற்​றிபெற்றது. இரணு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றன.

குஜ​ராத்​தின் உம்​ரேத், நாகாலாந்தின் கோரி​டாங் தொகு​திகளில் பாஜக வெற்றி பெற்றது.

திரிபு​ரா​வின் தரம்​நகர் தொகு​தி​யிலும் மகா​ராஷ்டி​ரா​வின் ராகுரி தொகு​தி​யிலும் பாஜக வேட்​பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மகாராஷ்டிராவின் பாராமதி தொகு​தி​யில் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி வேட்​​பாள​ரும்​ துணை முதல்​வரு​மான சுனேத்​ரா ப​வார்​ கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்​றி பெற்​றார்​.

கர்​நாட​கத்தின் பாகல்​கோட்​டை, தாவணகெரே தெற்கு தொகு​தி​களில் காங்​கிரஸ் கட்சி வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்