50 மீட்டர் உயரக் கைப்பேசிக் கோபுரத்தைக் காணவில்லை!

பிரயாக்ராஜ்: பத்து டன் எடையும் 50 மீட்டர் உயரமும் கொண்ட கைப்பேசி கோபுரம் களவுபோன சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கௌஷாம்பி மாவட்டத்திலுள்ள உஜ்ஜைனி எனும் சிற்றூரில் அக்கோபுரம் நிறுவப்பட்டிருந்தது.

ராஜேஷ் குமார் யாதவ் என்ற தொழில்நுட்பர் இதுகுறித்து நவம்பர் 29ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகாரளித்தார். அவர் தமது புகார் மனுவில் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியிலிருந்தே அக்கோபுரத்தைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அக்கோபுரத்திலிருந்த அனைத்துப் பாகங்களின் மொத்த மதிப்பு ரூ.8.5 லட்சம் என்று ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அக்கோபுரம் நிறுவப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளரையும் உள்ளூர்வாசிகளையும் காவல்துறை விசாரித்தது.

இவ்வாண்டு ஜனவரியில்தான் அக்கோபுரம் உஜ்ஜைனியில் நிறுவப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனையடுத்து, மார்ச் 31ஆம் தேதி சோதனைப் பணிக்காக உஜ்ஜைனி சென்றபோது, அங்கு கைப்பேசி கோபுரம் இருந்ததற்கான தடமே இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஓராண்டிற்குமுன் பீகார் மாநிலத்தில் இரும்புப் பாலத்தையே கொள்ளையர்கள் பெயர்த்துக்கொண்டுபோனது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!