தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகா கும்பமேளாவில் 55 லட்சம் வெளிநாட்டினர் கலந்துகொண்டனர்

1 mins read
f2e265f3-6356-4e25-b81c-22050a2a7ea6
144 ஆண்​டு​களுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா என்​ப​தால் 100க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்​த பக்தர்கள் அதில் பங்கேற்றனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 45 நாள்​கள் நடை​பெற்றது.

இதில் கிட்டத்தட்ட 55 லட்​சம் வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 ஆண்​டு​களுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்​பமேளா என்​ப​தால், 73 நாடு​களின் தூதர்​கள், 116 நாடு​களின் பக்​தர்​கள் திரிவேணி சங்​கமத்​தில் புனித நீராடினர்.

நேப்பாளம், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, கனடா, பங்ளாதே‌ஷ் ரஷ்​யா, ஜப்​பான், ஜெர்​மனி, பிரான்​ஸ், பிரேசில், மலேசி​யா, நியூசிலாந்​து, இத்​தாலி, தாய்​லாந்து உள்​ளிட்ட 100க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்​த பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர்.

மகா கும்​பமேளா​வில் வெளிநாட்டுப் பக்​தர்​களும் பங்கேற்பார்கள் என்பதற்காக அனைத்துலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடாரங்களின் அறைகள், குடில்​கள் அமைக்கப்பட்டன.

இவற்றில் தங்குவதற்கு இந்தியர்கள், வெளி​நாட்​டினர் இணை​யத்தளத்​தில் முன்​ப​திவு செய்​தனர்.

இதனையடுத்து, தங்​கும் கூடாரங்​கள், உணவு விடு​தி​கள் என மாநிலச் சுற்​றுலா கழகத்​துக்கு மட்​டும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ள​தாக அரசு தெரி​வித்​துள்​ளது.

தனி​யார் கூடாரங்​களுக்​கு ரூ.73 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இந்த தொகை இறுதி கணக்​கீட்​டுக்கு பிறகு மேலும் உயரும் என்று தெரி​கிறது.

கும்​பமேளா​வுக்கு வந்த வெளி​நாட்​டினர் அரு​கில் உள்ள வாராணசி, அயோத்தி, சித்​ரகூட், மதுரா மற்​றும் கோரக்​பூருக்​கும் விஜ​யம் செய்​தனர். இதனால் அங்​கும் உணவு விடு​தி​கள், வழி​காட்​டிகள், தனி​யார் போக்​கு​வரத்​து மற்​றும் உள்​ளூர் வணி​கர்​கள் அதிக வரு​வாய் ஈட்​டினர்.

குறிப்புச் சொற்கள்