இறந்தபின் 'காதலுக்கு மரியாதை!'

காதலித்தபோது திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டு, காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்ட பிறகு அவர்களது சிலைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்த சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த மாநிலத்தின் தாபி எனும் பகுதியில் கணேஷ்-ரஞ்சனா ஜோடி காதலித்து வந்தனர். தங்களது காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். 

ஆனால், இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலை ஏற்கவே இல்லை. இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

கணேஷ்-ரஞ்சனா ஜோடி ஒன்றுசேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள்தான் காரணம் என வருந்திய இருவரின் குடும்பத்தினரும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களது சிலைகளை தத்ரூபமாக செய்து அவற்றுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இறந்தவர்களின் ஆன்மா அமைதிகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற தாங்கள் இவ்வாறு செய்ததாக அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். 

இந்த ஜோடி உயிருடன் இருந்தபோதே அவர்களைச் சேர்த்துவைக்காமல் இறந்த பிறகு சிலை செய்து திருமணம் செய்துவைக்கப்பட்ட இந்தச் சம்பவம் தாபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!