கோல்கத்தாவில் மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்

1 mins read
78d1d50e-dda8-49d6-967c-620c8f15a0a6
சுமார் இரண்டு மணிநேரம் 30 விமானங்களின் வருகை தாமதமானதுடன், 30 விமானங்களின் புறப்பாடும் தாமதமாகியுள்ளது. - கோப்புப் படம்

கோல்கத்தா: கோல்கத்தா அனைத்துலக விமான நிலையத்தில் மோசமான வானிலையினால் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவில் திங்கட்கிழமை (ஜனவர் 6) கடும் மூடுபனியால் மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அனைத்துலக விமான நிலையத்தில் காலை 7.10 மணி முதல் 9 மணி வரை விமானங்கள் இயக்கப்படவில்லை என அந்த விமான நிலையத்தின் இயக்குனர் பரவத் ரஞ்சன் பியூரியா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணிநேரம் 30 விமானங்களின் வருகை தாமதமானதுடன், 30 விமானங்களின் புறப்பாடும் தாமதமாகியுள்ளது. மேலும், அங்கு தரையிறக்கப்படவிருந்த ஐந்து விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டது.

இந்நிலையில், விமான நிலைய முனையத்தில் தவிக்கும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னர், காலை 9 மணிக்கு மேல் வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதால், விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு காலை 9.04 மணியளவில் துபாயிலிருந்து வந்த முதல் விமானம் அங்கு தரையிறங்கியது.

குறிப்புச் சொற்கள்