மீண்டும் ஏலத்திற்கு வரும் தாவூத் இப்ராகிமின் விடுதி

மீண்டும் ஏலத்திற்கு வரும் தாவூத் இப்ராகிமின் விடுதி

1 mins read
fd3c49c4-9d7e-4779-b78d-0be8c2d24fea
-

மும்பை: மும்பையில் இருக்கும் 'டெல்லி ஸைக்கா' எனும் விடுதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமானது. அதனை மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் ஏலத்தில் 40.5 மில்லியன் ரூபாய்க்கு விலைபேசி வாங்கினார். அந்த விடுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளிக் கூடமாக மாற்ற விரும்பிய அவர், முன்பணமாக 3 மில்லியன் ரூபாயை வழங்கினார். மீதிப் பணத்திற்காக நன்கொடை திரட்டத் தொடங்கிய அவரால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 30 நாட்களுக்குள் நிதி திரட்ட முடியாமல் போனது.

கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு சில நாட்கள் விடுமுறையாகிப் போனதால் தனக்கு 20 வேலை நாட்கள் மட்டுமே அவகாசம் கிட்டியது எனவும் மீதிப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் கோரினார்.2016-01-09 06:00:16 +0800 மும்பையில் மீண்டும் ஏலத்துக்கு வரவிருக்கும் தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான 'டெல்லி ஸைக்கா' விடுதி. படம்: இணையம்