புதுடெல்லி: இந்திய அரசாங்கத்- தின் செல்லா நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளோர் மீது அந்நாட்டு வரு மான வரித் துறையினரின் பிடி இறுகத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை- யில் இருந்து தப்பிப்பதற்காக ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகத் தங்களிடம் உள்ள கறுப் புப் பணத்தைப் புதிய நோட்டுகளாக மாற்றி அவற்றைப் பங்ளாதேஷுக்- குக் கொண்டு சென்று பதுக்கி வைக்கும் முயற்சியில் இந்தியர்கள் பலரும் ஈடுபட்டுள்ளதாக உளவுத்- துறை தகவல்கள் தெரிவிக் கின் றன. இப்படி, பங்ளாதேஷ் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேகா லயா மாநிலத்தின் நொக்சி- யில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.29.70 லட்சத்- தைக் கடத்த முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கறுப்புப் பணத்தைக் கடத்தி பங்ளாதேஷில் பதுக்க முயற்சி
1 mins read

