சென்னை: மொத்தம் 28 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த போதைப் பொருட்களை சென்னை போலிசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது தொடர்பாக ஒருவர் கைதானார். கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக் கும் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வதற்காக வாடகை வீட்டில் இந்த போதைப்பொருட்கள் அடங்கிய மூட்டை கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கிடைத்த தகவ லையடுத்து அந்த வாடகை வீட்டை போலிசார் சோதனையிட்ட னர். பின்னர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த பரத் என்ற 22 வயது இளைஞரைக் கைது செய்தனர்.
28 மூட்டை போதைப்பொருட்கள் பறிமுதல்: இளைஞர் கைது
1 mins read

