உலகில் கண்பார்வைக் குறையுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர். அங்கு ஹைதராபாத் நகரில் பார்வைக் குறையுள்ளவர் களுக்கான சாய் ஜூனியர் காலேஜில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுயி பிரெயில் அறிமுகப்படுத்திய முறையை, அவருடைய 208வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், நேற்று பயன்படுத்தி மாணவர்கள் எழுத, படிக்க கற்றுக்கொளும் காட்சியைப் படத்தில் காணலாம். இந்தக் கல்லூரியில் இதே 'பிரெயில்' முறையைப் பயன்படுத்தி பார்வைக் குறையுள்ள மாணவர்கள் கணக்காளர் பாடத் திட்டமும் பயில்கின்றனர். படம்: ஏஎஃப்பி
'பிரெயில்' முறையில் கல்வி கற்கும் பார்வையற்ற மாணவர்கள்
1 mins read
-

