தந்தை சவப்பெட்டியை சுமந்த மகள்

தந்தை சவப்பெட்டியை சுமந்த மகள்

1 mins read
108a4969-1695-492d-a57e-ebc0de2457bf
-

பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலில் பலியானவர்களில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் ஒருவர். அவரது உடல் தகனம் குர்தாஸ்பூரில் நடைபெற்றபோது ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்துசென்றார். பொதுவாக, இந்து மதத்தில் ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து மது, தன் தந்தையின் உடலைச் சுமந்து சென்றார். குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, தன் தந்தை சீருடையுடன் சண்டைக்குப் புறப்பட்டதாகவும் தன் குடும்பத்தினர் இரண்டு மணி நேரம் படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி உயிர் தப்பியதாகவும் கூறினார். படம்: ஊடகம்