தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயிற்சியற்ற ஓட்டுநர்களால் விபத்துகள்; ரூ.4,500 கோடி செலவில் 1,600 பயிற்சி நிலையங்கள்: நிதின் கட்கரி

1 mins read
35682799-5fb7-41ba-be83-1fedcfc04240
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவில் ஏறக்குறைய 22 லட்சம் ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

பல விபத்துகள் பயிற்சியற்ற ஓட்டுநர்களால் ஏற்படுவதாகக் கூறியுள்ள அவர், “நாடு முழுவதும் படிப்படியாக 1,600 ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

“இதற்காக ரூ.4,500 கோடி செலவிலான திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டில் முறையான ஓட்டுநருக்கான பயிற்சி வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் படிப்படியாக 1,600 ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த பொருத்தமான பரிந்துரைகளை அனுப்புமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏறக்குறைய 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகள் பல பயிற்சியற்ற ஓட்டுநர்களால்தான் ஏற்படுகிறது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்