36,000 ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை: சட்டப் பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

36,000 ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை: சட்டப் பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

2 mins read
70311a22-2270-4912-a8f1-e50020a99add
நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த். - படம்: தமிழ் இந்து திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 36,000 ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், “தமிழகத்​தில் உள்ள பெரிய ஆறுகளில் தடுப்​பணை கட்​டி​னால் கடலில் கலக்​கும் நீரை தடுப்பதோடு தண்​ணீரைச் சேமிக்​கவும் முடியும். அவ்வாறு தண்ணீரைச் சேமிக்க ஏரிகளைத் தூர்வார்வது அவசியம்.

“தமிழகத்தில், 35 பெரிய ஆறுகள் உள்ளன. இவற்றில் தடுப்பணைகள் கட்டினால், மழையால் கிடைக்கும் 100 டிஎம்சி நீரைச் சேமிக்கலாம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காகக் கையேந்த வேண்டியதில்லை.

“ஒரு காலத்தில் நமது மாநிலத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. தற்போது அவை 27,000 ஏரிகளாகக் குறைந்துவிட்டன. அவற்றைத் துார்வாரினால் 150 டிஎம்சி நீரைச் சேமிக்கலாம். இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது,” என்று சவுமியா அன்புமணி பேசினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “கடந்த காலங்​களை​விட நீர்​வளத்​துறைக்கு அதிக நிதியை முதல்​வர் ஒதுக்​கி​யுள்​ளார். தனி​யார் பங்​களிப்​புடன் ஏரி, குளங்​களைத் தூர்​வாரும் பணி​களுக்கு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

“சென்​னை​யில் அடை​யாறு, கூவம் உள்​ளிட்ட ஆறுகள் மற்​றும் தமிழகத்​தில் ஊரக வளர்ச்​சித் துறை​யில் உள்ள 22 ஆயிரம் ஏரி​கள், நீர்​வளத் துறை​யில் உள்ள 14 ஆயிரம் ஏரி​களைத் தூர்​வார நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சவுமியா அன்புமணி, “விவ​சா​யிகளுக்​காக ஒதுக்​கப்​படும் மானி​யங்​கள் முறை​யாக விவ​சா​யிகளுக்​குச் சென்று சேர​வில்லை என்று அரசு அதி​காரி​களின் மீதும் விவ​சா​யிகள் குற்​றச்​சாட்டை முன்​வைக்​கின்​றனர்.

“தரு​மபுரி மாவட்​டத்​துக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வரவேண்​டும். விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்த வேண்​டும்,” என்றார்.

அதுகுறித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “விவ​சா​யிகளின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும். தரு​மபுரி மாவட்​டத்​துக்கு அனைத்​தும் செய்து கொடுக்​கப்​படும்,​” என்​று தெரி​வித்​தார்​.

குறிப்புச் சொற்கள்