தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட்ட 400,000 பக்தர்கள்

1 mins read
9b06e443-42c3-48ae-b036-c327daf02afe
தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​திலிருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்நாத் குகைக் கோயில் உள்​ளது.  - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: நடப்பாண்டு அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்களில் இதுவரை 4 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது ஓர் அற்புதம் என்றும் இதற்காக சிவபெரு​மானை வணங்​கு​வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“பாபா அமர்​நாத் சாத்​தி​யமற்​றதை சாத்​தி​ய​மாக்​கு​கிறார். அவரது ஆசிர்​வாதத்​தால், குகைக் கோயி​லில் தரிசனம் செய்த பக்​தர்​கள் எண்​ணிக்கை 4 லட்​சத்தை கடந்​துள்​ளது.

“மேலும், புனித யாத்​திரையை பக்​தர்​களுக்கு ஒரு தெய்​வீக அனுபவ​மாக மாற்​று​வ​தில் பங்கு வகிக்​கும் அனை​வருக்​கும் நன்றி தெரிவிக்​கிறேன்,” என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தமது பதிவில் கூறியுள்ளார்.

தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்நாத் குகைக் கோயில் உள்​ளது.

இங்கு இயற்​கை​யாக உரு​வாகும் பனி லிங்​கத்தை தரிசனம் செய்ய ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை செல்​கின்​றனர்.

இந்த ஆண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த ஜூலை 3ஆம் தேதி தொடங்​கியது. ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை யாத்​திரை நடை​பெற உள்​ளது.

குறிப்புச் சொற்கள்