தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசிலில் ரூ.41 கோடிக்கு ஏலம்போன ஆந்திர இன மாடு

2 mins read
5096afc5-95e2-4a54-a6ae-719393d5bfaa
ரூ.41 கோடிக்கு ஏலம்போன ‘வியாடினா 19’. - படம்: எக்ஸ் தளம்

பிரேசில் நாட்டில் ஆந்திராவின் நெலார் இனத்தைச் சேர்ந்த மாடு ஒன்று அதிக விலைக்கு ஏலம்போனது. இதன்மூலம், அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மாடு என்ற கின்னஸ் சாதனையை அது படைத்துள்ளது.

பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில் உயர் ரக மாடுகள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஏலத்தில் ஆந்திர இனத்தைச் சேர்ந்த மாடு ஒன்று இந்திய மதிப்புப்படி ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்டது.

அதிக விலை கொடுத்து மாடு ஏலத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் அனைத்துலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘வியாடினா 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடு, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை பூர்வீகமானக் கொண்ட நெலார் இனத்தைச் சேர்ந்தது.

நெலார் இனத்தைச் சேர்ந்த மாடு உருவத்தில் மிகப் பெரிய தோற்றம் கொண்டதாகவும் கிட்டத்தட்ட 1,000 கிலோவுக்கு மேல் எடையுடன் தடித்த தோல் உடையதாகவும் இருக்கும்.

இந்த வகை மாடுகள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய சக்தி கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடையது.

2023ஆம் ஆண்டில் 4.3 மில்லியன் டாலருக்கும் 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டாலருக்கும் வாங்கப்பட்ட இந்த மாடு, இந்தாண்டு சற்று கூடுதலாக 4.82 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு என்ற கின்னஸ் சாதனையை ‘வியாடினா 19’ படைத்துள்ளது.

மேலும், அனைத்துலக கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் கலந்துகொண்ட வியாடினா 19, மிஸ் தென் அமெரிக்கா விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்