பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் 7 மாவட்டங்களில், அரசாங்க அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, கர்நாடகா ஊழல் ஒழிப்புத்துறை இந்தச் சோதனை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
கோலார், கலபுரகி, தாவணகெரே, பெங்களூரு, தும்கூர், பாகல்கோட் மற்றும் விஜயபுரா ஆகிய மாவட்டங்களில் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
எட்டு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்கள் சொத்துகள் இருக்கும் இடங்களில் சோதனைகள் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தாவணகெரே நகரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் வீடுகளிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் கவலப்பூர் தலைமையில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பெங்களூரில், அரசாங்கத் தலைமைப் பொறியாளர், நிர்வாகப் பொறியாளர் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக்குச் சொந்தமான ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தும்குருவ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், கால்நடை மருத்துவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பெலகவி வடக்கு வட்டாரத்தில் உள்ள பத்திரப் பதிவாளரின் வீட்டிலும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையில், பாகல்கோட் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை முதல் பிரிவு எழுத்தரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைகளில் சிக்கிய ஆதாரங்கள் குறித்து எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

