ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துச்சமவெளி நாகரிகம் தொடர்பான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ராஜஸ்தானின் ராம்கர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவிலும் பாகிஸ்தானின் சந்தனவாலா பகுதியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள வறண்ட பாலைவனத்தில், ஹரப்பா காலத்து எச்சங்களும் சில தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
இது, ராஜஸ்தானின் ஆழமான பாலைவனத்திலும் சிந்துச் சமவெளியைப் போன்ற நாகரிக அடையாளம் இருப்பதற்கான முதல் சான்றாகும்.
மண்பாண்டங்கள், துளையிடப்பட்ட ஜாடிகள், சுடுமண் பாண்டங்கள், கத்திகள், களிமண், ஓடுகளாலான வளையல்கள் ஆகிய பொருள்களும் கிடைத்துள்ளன.