தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதவி மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், மூவர் கைது

1 mins read
f4668415-8d6b-446d-994f-bc296dcc45ee
தாக்கப்பட்ட பேராசிரியர் ராமச்சந்திர மூர்த்திக்குக் கைகளிலும் ஒரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்யூ) தெலுங்கு மொழித் துறை​த் தலைவர் பதவிக்கான மோதலில் பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துறையில் நான்கு பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் இருவர் பணி ஓய்வு பெற்​ற​தால் ஏனைய இரு பேராசிரியர்​களில் ஒரு​வர், மூன்று ஆண்​டுகளுக்குத் துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார்.

தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பில் சென்றதால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலு துறைத் தலை​வ​ராகப் பொறுப்பேற்றார்.

இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28ஆம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் அவருக்கு கைகள் மற்​றும் ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்​பட்டது.

தாக்குதல் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வாராணசி மாநகரக் காவல்துறை துணை ஆணை​யர் டி. சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடைபெற்றது.

இதில், சக பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலுவின் உத்தரவின்படி அவரது முன்​னாள் மாணவர்​கள் இருவர் தாக்​குதல் நடத்​தி​யது தெரிய வந்​தது.

உள்​ளூர் ரவுடிகள் நால்வருக்கு அந்த மாணவர்​கள் பணம் கொடுத்​ததும் அம்​பல​மானது. இதையடுத்து, முன்​னாள் மாணவர்கள் உட்பட மூவர் கைது செய்​யப்​பட்​டனர். பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு, முன்​னாள் மாணவர் காசிம் பாபு உட்பட நான்கு பேர் தலைமறை​வாகிவிட்​டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்