இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் டிரோன்கள்மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு

1 mins read
4a5c4d2f-74b6-4d79-a479-b01ab2f0e553
ரஜோரி மாவட்​டத்​தின் எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோடு (எல்​ஓசி) பகுதியில் வட்​டமடித்​த பாகிஸ்​தான் டிரோன்​களை இந்திய ராணுவம் துப்பாக்கியால் தாக்கியது. - படம்: தி வீக்

ஜம்மு: ஜம்​மு - ​காஷ்மீர் வழி​யாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்​தானின் ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) இந்​திய ராணுவம் தாக்கியுள்ளது.

ரஜோரி மாவட்​டத்​தின் எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோடு (எல்​ஓசி) பகுதியில் பாகிஸ்​தான் டிரோன்​கள் வட்​டமடித்​தன. சிறிது நேரம் இந்​திய எல்​லைக்​குள் பறந்த அவற்றை ராணுவம் தாக்கியது. அதைத்தொடர்ந்து, அவை பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்​குள் தப்​பிச் சென்​றன என்று ராணுவத் தளபதி உபேந்​திர திவேதி கூறினர்.

கடந்த மூன்று நாள்​களாக ஜம்மு எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் ட்ரோன்​களின் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளதாகவும் அதுகுறித்​து, பாகிஸ்​தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்​குநரிடம் (டிஜிஎம்ஓ) கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை (ஜனவரி 11) நவ்​ஷேரா செக்​டார், பூஞ்ச் மாவட்​டத்​தின் மன்​கோட், சம்பா மாவட்​டத்​தின் ராம்​கர் உள்​ளிட்ட பகு​தி​களில் டிரோன்​களின் நடமாட்​டம் கண்​டறியப்​பட்​டன.

முன்​ன​தாக, வெள்​ளிக்​கிழமை இரவு சம்பா மாவட்​டத்​தின் பாலோரா கிராமத்​தில் டிரோன் மூலம் வீசப்​பட்ட இரண்டு பிஸ்​டல்​கள், மூன்று மேகசின்​கள், ஒரு கையெறி குண்டு ஆகிய​வற்றை பாது​காப்​புப் படை​யினர் கைப்​பற்​றினர்.

இதேபோன்று ரஜோரி​யின் சிங்​குஸ் பகு​தி​யில் உள்ள துங்கா காலா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் டிரோன்​கள் நுழைந்​தன. இந்​திய வீரர்​கள் அதனை விரட்​டியடித்​தனர். பாகிஸ்​தானின் இத்​தகைய தொடர்ச்​சி​யான அத்​து​மீறல்​களை அடுத்து எல்​லைப் பகு​தி​களில் பாது​காப்​புப்​ படை​யினர்​ விழிப்புநிலையில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்