ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம்

ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம்

1 mins read
124eeea9-c50e-4731-b832-327ab9009ec4
ஆஸ்திரேலியாவின் ஏர்​டிரங்க் நிறு​வனத்தின் தலைவர் ராபின் குதா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்படும் ஏர்​டிரங்க் நிறு​வனம், இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

அது, ஆசி​யா, பசிபிக் வட்டாரத்​தில் மிகப்​பெரிய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) நிறுவனம் ஆகும்.

பங்ளாதேஷ் வம்​சாவளியைச் சேர்ந்த ராபின் குதா 2015ஆம் ஆண்​டில் ஆஸ்​திரேலி​யா​வில் ஏர்​டிரங்க் நிறு​வனத்தைத் தொடங்​கி​னார்.

இப்​போது இந்​தி​யா, ஜப்​பான், சிங்​கப்​பூர், மலேசியா, ஹாங்​காங் உட்பட பல்​வேறு நாடு​களில் அந்த நிறுவனத்தின் கிளை​கள் செயல்​படு​கின்​றன.

இந்​தி​யா​வில் மும்​பை, சென்​னை, ஹைத​ரா​பாத் நகரங்​களில் ஏர்​டிரங்க் நிறு​வனத்​தின் மிகப்​பெரிய தரவு நிலையங்கள் செயல்படு​கின்​றன.

இந்த நிறுவனத் தலை​வர் ராபின் குதா டெல்லியில், சனிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்​தித்​தார். அப்​போது வரும் 2030ஆம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் ரூ.3 லட்​சம் கோடியை ஏர்​டிரங்க் முதலீடு செய்​யும் என்று அறி​வித்​தார்.

இதுகுறித்துப் பிரதமர் மோடி சமூக வலை​த்தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “ஏர்​டிரங்க் நிறு​வனத்தின் முதலீடு இந்தியாவின் மின்னியல் உள்​கட்​டமைப்​பில் மிகப்​பெரியது. மேகக் கணிமை மற்​றும் செயற்கை நுண்​ணறிவுத் துறை​யில் உலகின் நடுவமாக இந்​தியா உரு​வெடுத்து வரு​கிறது.

“ஏர்​டிரங்க் நிறுவன முதலீட்​டால் இந்தத் துறை​யில் இந்​தியா மேலும் வேக​மாக முன்னேறிச் செல்​லும். நாட்​டில் வேலை​வாய்ப்​பு​கள் கணிச​மாகப் பெரு​கும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்