தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆய்வு

2 mins read
03dfb505-c143-4230-aeaf-2492e8e09b2a
பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் கூடிய விரைவில் சூடுபிடிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் சட்​டமன்றத் தேர்​தல் தொடர்பான முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் சனிக்கிழமை (அக்டோபர் 4) ஆய்வு மேற்​கொண்டார்.

பீகார் மாநில சட்​டப்​மன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் விரைவில் தேர்​தல் நடை​பெற உள்ளது.

இந்தச் சூழலில் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் பீகார் தலைநகர் பாட்னா சென்றனர்.

அவர்​கள் அக்டோபர் 4, 5ஆம் தேதிகளில் மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் மூத்த அதி​காரி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்துவர். இதன் அடிப்​படை​யில் பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து பீகார் அரசி​யல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

“சாத் பண்​டிகை அக்​டோபர் 28ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் ​பிறகே தேர்​தல் நடத்​தப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த முறை​யும் இரு கட்​டங்​களாக வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படலாம். அக்​டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதிக்குள் முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறக்​கூடும். நவம்​பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிக்​குள் இரண்டாம் கட்ட தேர்​தல் நடத்​தப்​படலாம். நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறலாம்.

பீகாரில் மொத்​தம் 243 தொகு​தி​கள் உள்​ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு குறித்து வரும் 8ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்​லி​யில் முக்​கிய ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் தொகு​திப் பங்​கீடு உறுதி செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் கூடிய விரைவில் சூடுபிடிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்