தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கு வங்கத்தில் மாண்டு கிடந்த பாஜக தலைவர்

1 mins read
94017d3d-92c1-4b6e-995b-059ce0d4cdbf
கோப்புப் படம்: - இணையம்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தலைவர் ஒருவர் அக்கட்சியின் அலுவலகத்தில் மாண்டுகிடந்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள உஸ்தி நகரில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் பிருத்விராஜ் நஸ்கார் என்பவரின் சடலம் காணப்பட்டது. அந்நகர் இருக்கும் மாவட்டத்தில் பாஜகவின் சமூக ஊடகக் கணக்கை அவர் கவனித்து வந்தார் என்று இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக, மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறைகூறியது. அதேவேளை, பிருத்விராஜ் நஸ்காரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.

ரத்தத்தில் ஊறியபடி இருந்த திரு நஸ்காரின் உடல், வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) கட்சி அலுவலகத்தில் காணப்பட்டது. இம்மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து நஸ்காரைக் காணவில்லை என்று அவரின் குடும்பத்தார் கூறியிருந்தனர்.

நஸ்காரைக் கூரான ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மாண்டதாகவும் கைதான பெண் ஒப்புக்கொண்டார் என்று காவல்துறை தெரிவித்தது. மாண்டவருக்கும் கைதானவருக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, அவர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய தகராறு போன்ற கண்ணோட்டங்களில் விசாரணை நடத்துவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்