விமானத்தில் புகைபிடித்த இந்தியப் பெண்

மும்பை: விமானம் பறந்துகொண்டிருந்தபோது புகைபிடித்ததற்காக இந்தியப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதி மும்பையில் இருந்து ராஞ்சிக்குச் சென்ற  இண்டிகோ விமானத்தில் அப்பெண் புகைபிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் என்ற அந்த வலைப்பதிவாளர் கழிவறைக்குள் புகைபிடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து விமானத்தில் அபாய ஒலி ஒலித்ததாகவும் ‘ஜெட் அரீனா’ டுவிட்டர் செய்தி தெரிவிக்கிறது.

அதனையடுத்து, ஐஸ்வர்யா ராயை விமானச் சிப்பந்திகளில் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்தார்.

இதுகுறித்து அறிந்த டுவிட்டர்வாசிகள், அப்பெண்ணைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாதுகாப்புச் சோதனையைக் கடந்து அவரால் எப்படி சிகரெட்டையும் பற்றவைப்பானையும் விமானத்திற்குள் எடுத்துச் செல்ல முடிந்தது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர், “இந்தியாவில் படிக்காதவர்களைவிட படித்தவர்கள்தான் மோசமாக நடந்துகொள்கின்றனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!