ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

1 mins read
8880a752-6914-4a70-bbf2-f4a1b97d2c31
ஏப்ரல் 20ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில், பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பேருந்தின் சிதைந்த பாகங்கள். - படம்: பிடிஐ

ஜம்மு: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.

இகாகோர்ட் கிராமத்திற்கு அருகே திங்கட்கிழமை இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

அந்தப் பேருந்து உதம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது. கொண்டை ஊசி வளைவில் வளைந்தபோது, நிலைதடுமாறி உருண்டு கீழே விழுந்தது.

விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களையும் அவர்கள் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தோரின் உடல்களும் அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
ஜம்மு காஷ்மீர்விபத்துஉயிரிழப்பு