தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம்

1 mins read
020b1f9b-0d0d-4374-a66e-9be3cf35ec28
கஞ்சா கலந்திருந்த உணவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: இந்தியாவின் ஹைத​ரா​பாத் நகரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) ஹோலி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தூல்​பேட்டை மல்சா புரம் என்னும் இடத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்​தில் குல்ஃபி ஐஸ்​கிரீம்​கள், பர்​பிக்​கள், இனிப்பு உருண்டைகள் விநியோகம் செய்​யப்​பட்​டன.

இதில் கஞ்சா கலந்​திருப்​பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசி​ய​மாக சிறப்பு அதிரடிப் படை​யினருக்கு தகவல் கொடுத்​தனர்.

அதன்​பேரில் உடனடி​யாக சிறப்பு அதிரடிப்​படை​யினர் சம்பவ இடத்​திற்கு வந்​து, அங்கு விழா ஏற்​பாடு செய்த சத்​ய​நா​ராயண சிங் என்​பவரை கைது செய்து விசா​ரித்​தனர். கஞ்சா கலந்திருந்த உணவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் பின்​னணி​யில் இருப்​பது யார், கஞ்சா எங்​கிருந்து வந்​தது என காவல்துறை அதிகாரிகள் தீவிர​மாக வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

குறிப்புச் சொற்கள்