தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த ஏழு இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி

2 mins read
f9336769-aa35-492f-88d9-da033a0d1a4d
கிறிஸ்​துமஸ் சந்தை​யில் நடத்தப்பட்ட தாக்​குதலில் இந்தி​யர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். - படம்: இபிஏ

புதுடெல்லி: ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரால் மோதி நடத்திய தாக்குதலில் இந்தி​யர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்​தனர். அவர்​களுக்குத் தேவையான உதவிகளை இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.

ஜெர்​மனி​யின் மேக்​டேபர்க் நகரில் கிறிஸ்​துமஸ் பண்டிகைக்​காக, மிகப்​பெரிய கடைகள் கொண்ட சந்தை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்​ளிக்​கிழமை (டிசம்பர் 20) அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்​தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலை​யில் செல்​வோர் மீது மோதி​யபடி நிற்​காமல் சென்​றது. இதில் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்​தனர். 60க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​களில் பலருடைய நிலைமை கவலைக்​கிடமாக உள்ளது.

காரைத் தாறு​மாறாக ஓட்டி தாக்​குதல் நடத்​தி​ய​வர், சவூதி அரேபி​யாவைச் சேர்ந்த மனநல மருத்​துவர் என தெரிய வந்துள்ளது. அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசா​ரித்து வருகின்​றனர். இந்நிலை​யில் காரால் மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்​களில் மூவர் சிகிச்​சைக்​குப் பிறகு மருத்​துவ​மனை​யில் இருந்து இல்லம் திரும்பினர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்​சை​யில் உள்ளனர்.

காயம் அடைந்த இந்தி​யர்​களின் குடும்பத்​தினரை பெர்​லினில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைச் செய்துவருகின்​றனர் என்று இந்திய வெளி​யுறவு அமைச்​சு திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரி​வித்​தது.

இதுகுறித்து வெளி​யுறவு அமைச்​சு வெளி​யிட்ட அறிக்கை​யில், ‘‘ஜெர்​மனி​யில் நடத்​தப்​பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்​கிறோம். ஐவரின் உயிர்கள் பறிக்​கப்​பட்​டுள்ளன. பலர் காயம் அடைந்​துள்ளனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்காகப் பிரார்த்தனை செய்​கிறோம். காயம் அடைந்த இந்தி​யர்​களின் குடும்பத்​தினருக்கு வேண்டிய உதவிகள் செய்​யப்​படு​கின்​றன,’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தத் தாக்​குதலுக்கு சவூதி அரேபிய அரசும் கண்டனம் தெரி​வித்​துள்ளது. ஜெர்மனி மக்கள் மற்றும் அரசுக்கு முழு ஆதரவு அளிப்​பதாக சவூதி அரேபியா தெரி​வித்​துள்ளது. எட்டு ஆண்டு​களுக்கு முன்னர் ஜெர்​மனி​யில் இதேபோல் கனரக லாரி ஒன்றைத் தீவிரவாதி தாறு​மாறாக ஓட்டிச் சென்று தாக்​குதல் நடத்​தினார். இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். பலர் ​கா​யம் அடைந்​தனர். பின்னர் இத்​தாலியில் அந்​தத் தீ​விர​வா​தியைக் காவல்துறையினர் சுட்டுக் ​கொன்றது குறிப்​பிடத்​தக்​கது.

குறிப்புச் சொற்கள்