உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பள்ளியில் பணம் திருடிய கும்பல்

ஹைதராபாத்: இடுப்பிற்குக் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் பள்ளிக்குள் புகுந்த ஒரு கும்பல் ரூ.785,000 பணத்தைக் களவாடிச் சென்றது.

இச்சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இரவு இடம்பெற்றது.

கும்பலின் திருட்டுச் செயல் பள்ளியிலுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவாகியுள்ளது.

முகமூடி, கையுறை, உள்ளாடை அணிந்திருந்த இருவர் பள்ளிக்குள் புகுந்ததையும் அங்கிருந்த ஓர் இழுப்பறை மேசையில் தேடியதையும் அக்காணொளிகள் காட்டுகின்றன.

பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அந்த ‘உள்ளாடைக் கும்பல்’ பல்வேறு பகுதிகளில், குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தின் மாதப்பூர் பகுதியில் தென்பட்ட அக்கும்பல், ஆந்திராவின் திருப்பதி வட்டாரத்திலும் அடிக்கடி கைவரிசை காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது. அக்கும்பல் பூட்டியுள்ள வீடுகளையும் வணிகக் கட்டடங்களையும் குறிவைத்துச் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!