சென்னை விமானம் அவசரத் தரையிறக்கம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் அவ்விமான நிலையத்திற்கே திரும்பியது.

டெல்லியில் இருந்து கிளம்பிய  6E-2789 என்ற அவ்விமானம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் அங்கேயே தரையிறங்கியது.

நேற்று சனிக்கிழமை (ஜூன் 10) இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.

அவ்விமானத்தில் 230க்கும் மேற்பட்டோர் இருந்ததாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டபின் அவ்விமானத்தில் தேவையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் குறிப்பிட்டது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!