16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதித்த சென்னைப் பெண்

16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதித்த சென்னைப் பெண்

2 mins read
e56a0e98-cb9b-4407-b852-cd3668e0e91d
அடுத்து வட அமெரிக்காவின் அலாஸ்​கா​வில் உள்ள டெனாலி மலை​யில் ஏறத் திட்டமிட்டுள்ளார் நிஷா. - படம்: டூரிசம் டைம்ஸ்

சென்னை: உலகின் ஏழு கண்​டங்​களி​லும் உள்ள ஏழு உயர்ந்த சிகரங்​களை அடைய வேண்​டும் என்ற நோக்​கத்துடன் தன் தந்தையோடு லட்சியப் பயணத்​தைத் தொடங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 16 வயது நிஷா சசிகுமார்.

இதன் மூலம் ‘மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் பெண்’ என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

சாதனையாளர்கள் இருவரும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமது மகள் மே 25ஆம் தேதி உலகின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்​ததாகத் தெரிவித்தார் திரு சசிகுமார்.

இதற்கு முன்பு நேப்பாளத்​தைச் சேர்ந்த 16 வயதுப் பெண், 187 நாள்​களில் சிகரத்தை அடைந்த நிலை​யில், தற்போது 16 வயதைக் கடந்து, 80 நாள்களான நிலையில், நிஷா சாதனை புரிந்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு சசிகுமார், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இச்சாதனையைப் புரிந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றார்.

தமது மகளின் இச்சாதனைமூலம், இந்தியாவில் உள்ள பெண் குழந்​தைகள் மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார் அவர்.

இது​வரை ஆப்​பிரிக்க நாட்​டில் உள்ள கிளி​மாஞ்​சா​ரோ, ரஷ்யா​வின் எல்​புரூஸ், ஆஸ்​திரேலிய​வின் கோசி​யாஸ், இந்​தோனீசியா​வின் காஸ்​டன் பிரமிட், அர்​ஜென்​டி​னா​வின் அகன்​காங்கோ சிகரங்​களில் ஏறிச் சாதனை படைத்​துள்​ள தந்தையும் மகளும் அடுத்து வட அமெரிக்காவின் அலாஸ்​கா​வில் உள்ள டெனாலி மலை​யில் ஏறத் திட்டமிட்டு உள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்​தில் ஏறக் கடந்த ஓராண்டாக பெங்​களூரு, மைசூரு​வில் உள்ள மலைகளில் ஏறிப் பயிற்சி மேற்​கொண்​டதாகத் தெரிவித்த நிஷா, தன் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்​ப​தால் வாரத்​தில் ஐந்து நாள்​கள் பள்​ளி​யிலும் வார இறுதியில் வெளிமாநிலங்​களுக்குச் சென்றும் பயிற்சி மேற்​கொண்​டதாகக் குறிப்பிட்டார்.

“இளம் வயதில் ஏழு கண்​டங்​களி​லும் உள்ள மலை உச்​சிகளில் ஏறிச் சாதனை படைக்கவேண்​டும் என்ற லட்சியப் பயணத்தை வரும் நவம்​பர் மாதத்​தில் முடிக்க இருக்​கிறோம்,” என்றார் நிஷா.

குறிப்புச் சொற்கள்
எவரெஸ்ட்சிகரம்சாதனை