தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காசோலை வைப்பு: உடனே பணம் பெறும் வசதி அக்டோபர் 4 முதல் அமல்

2 mins read
920833ba-2bd4-4f35-b1e6-f2192007fd58
காசோலைகள் செல்லுபடியாகாததைத் தடுக்​க​வும் தாமதங்​கள் அல்​லது நிராகரிப்பு செய்​யப்​படு​வதை தவிர்க்​க​வும் காசோலை​யில் அனைத்து விவரங்​களை​யும் துல்​லிய​மாக நிரப்​பப்​படு​வதை உறுதி செய்​யும்​படி வாடிக்​கை​யாளர்​களை இந்த இரு தனி​யார் வங்​கி​களும் அறி​வுறுத்​தி​யுள்​ளன. - படம்: இந்திய ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: ​வங்கிகளில் காசோலை வைப்புக்குப் பிறகு உடனடியாக பணத்தைப் பெறும் சேவை சனிக்கிழமை (அக்டோபர் 4) முதல் நடப்புக்கு வருகிறது.

விரை​வாக மற்​றும் பாது​காப்​பான முறையில் பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​எஃப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையைப் பணமாக மாற்​று​வதற்​கான வசதியை அக்டோபர் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளன.

அதன்​படி, அக்​டோபர் 4 முதல் வங்கிகளில் வைக்கப்படும் காசோலைகள் இனி புதிய நடைமுறை​யின்கீழ் ஒரே நாளில் பரிசீலிக்​கப்​பட்டு, பணம் சில மணி நேரங்​களுக்​குள் வாடிக்​கை​யாளர்​களின் கணக்​கில் போடப்படும்.

காசோலைகள் செல்லுபடியாகாததைத் தடுக்​க​வும் தாமதங்​கள் அல்​லது நிராகரிப்பு செய்​யப்​படு​வதை தவிர்க்​க​வும் காசோலை​யில் அனைத்து விவரங்​களை​யும் துல்​லிய​மாக நிரப்​பப்​படு​வதை உறுதி செய்​யும்​படி வாடிக்​கை​யாளர்​களை இந்த இரு தனி​யார் வங்​கி​களும் அறி​வுறுத்​தி​யுள்​ளன.

‘பாசிட்​டிவ் பே சிஸ்​டம்’ பயன்​படுத்தி பாது​காப்பை மேம்​படுத்​த​வும் சரி​பார்ப்​புக்​கான முக்​கிய காசோலை விவரங்​களை முன்​கூட்​டியே சமர்ப்​பிக்க வேண்​டும் என்​றும் வாடிக்​கை​யாளர்​களிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

ரூ.50,000க்கும் அதி​க​மான காசோலை வைப்புக்கு குறைந்​தது 24 மணி வேலை நேரத்​திற்கு முன்​ன​தாக கணக்கு வைத்​திருப்​பவர்​கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்​றும் பயனாளி​யின் பெயரை வங்​கிக்கு தெரியப்படுத்த வேண்​டும்.

காசோலையை வழங்​கிய​வுடன் வங்​கி​கள் இந்த விவரங்​களைச் சரி​பார்க்​கும். தகவல் பொருந்​தி​னால் காசோலைகள் ஏற்கப்பட்டு பணத்தை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்​யப்​படும்.

நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிடில் கோரிக்கை நிராகரிக்​கப்​படும். மேலும், பணம் எடுப்​பவர் விவரங்​களை மீண்​டும் சமர்ப்​பிக்க வேண்​டும். வாடிக்​கை​யாளர்​கள் குறிப்​பிட்ட வட்டார முகவரி​களுக்குக் காசோலை விவரங்​களை மின்​னஞ்​சல் மூலம் அனுப்ப வேண்டும். வங்​கி​கள் காசோலை​யைப் பெறு​வதற்கு முன்பு ஒப்​புதல் செய்​தியை அனுப்​பும்.

மேலும், ரூ.5 லட்​சத்​திற்கும் மேல் உள்ள காசோலைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ‘பாசிட்​டிவ் பே’ அணுகுமுறையைக் கட்​டாய​மாக்​கி​யுள்​ளது, அதே நேரத்​தில் ரூ.50,000க்கும் மேலான காசோலைகளுக்​கும் இது கட்​டா​யம் பரிந்​துரைக்​கப்​படு​கிறது.

‘பாசிட்​டிவ் பே’​வின்கீழ் சரி​பார்க்​கப்​பட்ட காசோலைகள் இந்திய ரிசர்வ் வங்​கி​யின் குறை தீர்வு முறை​யின்​கீழ்​ பாது​காக்​கப்​பட்​ட​வை​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

குறிப்புச் சொற்கள்