18 பெண்களின் உயிரைப் பறித்த நிறுவனத்துக்கு ‘சீல்’

18 பெண்களின் உயிரைப் பறித்த நிறுவனத்துக்கு ‘சீல்’

1 mins read
d03b95d8-473d-4c19-8650-e0a2db72229a
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. - படம்: தமிழ் இந்து திசை

திரு​வள்​ளூர்: சென்னை அருகே அமோனியா வாயுக் கசி​வால் 18 பேரின் உயி​ரிழப்​புக்குக் காரண​மான கன்​னிகைப்​பேர் கடலுணவு ஏற்றுமதி நிறு​வனத்​துக்​கு வரு​வாய்த் துறை அதி​காரி​கள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் செயல்​பட்டு வந்த இறால் உள்​ளிட்ட கடலுணவுப் பொருள்களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​துவந்த தனி​யார் நிறு​வனத்​தில் ஜூன் 21ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

அந்த விபத்​தில் 83 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெண் ஊழியர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்​நிலை​யில், விபத்து நடந்த தனி​யார் நிறு​வனத்​தில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த 400 டன் இறால் உள்​ளிட்ட கடல் உணவு​கள் வெவ்வேறு இடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டன.

அதனைத் தொடர்ந்​து, அந்த நிறு​வன வளாகத்திலிருந்து அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வரை நீடித்த அந்தப் பணியில் தொழில்​நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், நிறு​வனத்​தின் நிர்​வாக அலு​வல​கம், ஊழியர்​கள் தங்​குமிடம், உணவுப் பொருள்​களைப் பதப்​படுத்​தும் கூடம், அமோனியா வாயு சேமிப்புத் தொட்​டிகள் அடங்​கிய வளாகம் ஆகிய​வற்றுக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் முன்னிலையில் புதன்கிழமை (ஜூலை 8) அந்தப் பணி நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்