மும்பையில் உயிர்க்கொல்லி மாத்திரைகள் மூலம் 15,000 பேரைக் கொல்ல சதி: ஒருவர் கைது

மும்பையில் உயிர்க்கொல்லி மாத்திரைகள் மூலம் 15,000 பேரைக் கொல்ல சதி: ஒருவர் கைது

2 mins read
70142666-c33d-4e01-adfc-8616c7c37d52
நச்சு மாத்திரைகளுடன் சிக்கிய பயாஸ் பிரேம்ஜி - படம்: இந்து தமிழ் திசை

மும்பை: ​மும்பை முஹர்ரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்லத் திட்​ட​மிட்​டதாக உயிர்க்கொல்லி மாத்​திரைகளு​டன் கைதான நபர் ஒருவர் தெரி​வித்​துள்​ளார்.

ரே ரோடு பகு​தி​யில் உள்ள ரஹ்ம​தா​பாத் மயானத்துக்கு அரு​கில் நடை​பெற்ற ஊர்​வலத்​தில் பங்கேற்றவர்களுக்​கு ஒரு​வர் மாத்திரையை விநியோகித்​துள்​ளார். குறிப்​பாக, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அந்த மாத்​திரைகளை வலி நிவாரணி, நோய் எதிர்ப்புச் சக்தி மாத்​திரைகள் என்று கூறி கொடுத்​துள்​ளார்.

இதில் சந்​தேகமடைந்த ஒரு பெண் காவல் அதிகாரி புகார் செய்ததால் அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மாத்திரைகளை விநி​யோகித்த பயாஸ் பிரேம்ஜி என்​பவரைக் கைது செய்​தனர்.

அவரைக் காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதற்கிடையே, அந்த மாத்​திரைகளை உட்​கொண்ட 11 பேர் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்டு உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்பட்டனர். தற்​போது, அவர்​கள் அனை​வரும் ஆபத்​தான கட்​டத்​தைத் தாண்​டி​யுள்​ளனர்.

அந்த மாத்திரையை உட்​கொண்ட சல்​மான் சையத் என்​பவருக்குக் கடுமை​யான வயிற்று வலி​யும் வாந்​தி​யும் ஏற்​பட்​டுள்​ளது.

அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசிய மும்பை மாநகரக் காவல் துணை ஆணை​யர் ஜெயந்த் மீனா, “பு​காரையடுத்து மாத்​திரைகளை விநி​யோகித்த பயாசைக் காவல்துறை கைது செய்தனர். அவரிட​மிருந்து 14,900 மாத்​திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மாத்திரைகளில் எலியைக் கொல்லும் நச்சு, பிற பூச்​சிக்​கொல்​லிகளில் பயன்​படுத்​தப்​படும் ‘ஸின்க் பாஸ்​பைட்’ என்ற ஆபத்​தான வேதிப்​பொருள் கலக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது,” என்றார்.

ஊர்வலத்​தில் பங்​கேற்ற ஆயிரக்​கணக்​கான மக்​களைக் கொல்வதே தனது நோக்​கம் என்று விசா​ரணை​யின்​போது பயாஸ் ஒப்​புக்​கொண்​டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பிபிஏ பட்​ட​தா​ரி​யான அந்த நபர் அடிக்​கடி வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

குறிப்​பாக, அவர் இதற்கு முன்பு ஈரான் மற்​றும் ஈராக் நாடு​களுக்​குச் சென்றுள்ளார்.

அவர்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்