தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடைத்தாள்களை கல்லூரியின் கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை

1 mins read
3a925fc1-d773-4ce7-a1e2-48685e523856
தேர்வுத்தாள்களை திருத்தும் கடைநிலை ஊழியர். - படம்: மெட்டா ஏஐ

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள கல்லூரியில் தேர்வுத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை எழுந்தது.

நர்​ம​தாபுரம் மாவட்​டம், பிபரியா என்ற இடத்​தில் பகத் சிங் அரசு கல்​லூரி உள்​ளது. இக்​கல்​லூரியில் தேர்வு விடைத்​தாள்களை கடைநிலை ஊழியர் ஒரு​வர் திருத்​தும் காணொளி சமூக வலை​த்தளத்​தில் வெளி​யானது. இதனால் மாணவர்களிடையே பெரும் சர்ச்சைக் கிளம்பியது.

இதுகுறித்து விசாரித்த அமைச்​சர் விஷ்​வாஸ் சாரங், “கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்​மா, விடைத்​தாள் திருத்​தும் பணிக்​கான பொறுப்பு அதி​காரி ராம்​குலம் படேல் ஆகிய இரு​வரும் தற்பொழுது இடைநீக்கம் செய்​யப்​பட்​டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது,” என்று தெரி​வித்​தார்.

கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்மா கூறுகை​யில், “விடைத்​தாள் திருத்​தும் பணியை பேராசிரியர் ஒரு​வரிடம் கொடுத்​தோம். அவர் அப்​பணியை கடைநிலை ஊழியரிடம் கொடுத்​தார் என்பது எனக்குத் தெரியாது. அதனால் எனது இடைநீக்கம் உத்​தரவை திரும்​பப் பெறவேண்​டும் எனக் கோரி உயர்​கல்​வித் துறைக்கு கடிதம்​ எழு​தி​யுள்​ளேன்,” என்​று கூறினார்.

குறிப்புச் சொற்கள்