புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன் ஆகியோர்மீது ஊழல் வழக்கில் அக்டோபர் 13ஆம் தேதி குற்றச்சாட்டுச் பதிவு செய்யப்பட்டது.
இது, நடக்கவிருக்கும் பீகார் தேர்தலில் லாலுவுக்கும் அரது குடும்பத்தினருக்கும் பெரும் பின்னடைவைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.
2004ஆம் ஆண்டிலிருந்து 2009ஆண்டு வரை இந்திய ரயில்வே அமைச்சராக ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் செயல்பட்டார்.
அப்போது, இரு ரயில்வே ஓட்டல்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் சுஜாதா ஓட்டலுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்திற்கு லஞ்சமாக 3 ஏக்கர் நிலத்தை லாலு பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது புதுடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அப்போது தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிலத்துக்கு ஈடாக ஓட்டல் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்குவதில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து லாலு சதி செய்ததும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணை முடிவுகளில் தெரிய வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.