புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 130 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒருநாள் கொவிட்-19 தொற்று பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அங்கு புதிதாக 1,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், கடந்த ஏழு நாள்களில் கிட்டத்தட்ட 5,000 பேர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மேலும், சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 19 பேர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு அதிகமாக உள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.
அதுபோல், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று ஏறுமுகத்தில் உள்ளது.