பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கிய இந்திய விமானம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் சென்ற 6E-1736 என்ற இண்டிகோ விமானம், மருத்துவக் காரணத்திற்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது.

ஞாயிற்றுக்கிழமை (12-03-2023) இரவு 10.05 மணிக்கு அந்த விமானம் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து நான்கு மணி நேரத்தில் தோஹா சென்றுவிடலாம் என்ற நிலையில், நள்ளிரவு தாண்டியதும் அவ்விமானம் கராச்சியில் தரையிறங்கியது.

விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதிலிருந்த பயணி ஒருவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, விமானம் கராச்சிக்குத் திருப்பிவிடப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழு அவரைப் பரிசோதித்தது. ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு கைவிரித்துவிட்டது.

இறந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த திரு அப்துல்லா, 60, என அடையாளம் காணப்பட்டது.

தேவையான நடவடிக்கைகளுக்குப் பிறகு விமானம் மீண்டும் தோஹாவிற்குக் கிளம்பிச் சென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!