வரதட்சணைக் கொடுமை: இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் மரணம்

வரதட்சணைக் கொடுமை: இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் மரணம்

1 mins read
7be0d261-6b2a-4fd2-96ca-56dbe89c2201
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்​டும் கடந்த 2024ல் 2,038 மரணங்​கள் பதிவாகி​யுள்​ளன.  - படம்: லிங்க்ட் இன்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டு 5,737 வரதட்சணை மரணங்கள் பதிவாகி இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, தேசியக் குற்ற ஆவணக் காப்​பகம் வெளி​யிட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இதுபோன்ற மரணங்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் 7,634 பெண்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2024ல் மரண எண்ணிக்கை 5,737 ஆகக் குறைந்​துள்​ளது.

ஏறக்குறைய 1,900 மரணங்​கள் குறைந்​துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை குறைந்தது ஆறுதல் அளித்தாலும், இப்போதும்கூட நாள்தோறும் 15க்​கும் மேற்​பட்ட பெண்​கள் வரதட்​சணைக் கொடுமை​யால் உயி​ரிழப்​பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் வரதட்​சணைக் கொடுமை​யால் உயி​ரிழக்​கிறார். குறிப்​பிட்ட சில மாநிலங்​களி​லேயே மிக அதிக அளவில் மரணங்கள் பதி​வாகி​யுள்​ளன.

“குறிப்​பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்​டும் கடந்த 2024ல் 2,038 மரணங்​கள் பதிவாகியுள்​ளன. இது நாட்​டின் ஒட்​டுமொத்த வரதட்​சணை மரணங்​களில் மூன்​றில் ஒரு பங்​கிற்​கும் அதி​க​மாகும்,” என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பீகாரில் 1,078 மரணங்​களும் மத்​தி​யப் பிரதேசத்​தில் 450 மரணங்​களும் பதி​வாகி​யுள்​ளன. ராஜஸ்​தான் (386), மேற்கு வங்​கம் (337) மாநிலங்​களும் இந்த வரிசை​யில் முன்​னிலை​யில் உள்​ளன.

குறிப்புச் சொற்கள்