இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.07% ஆக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட உணவுப் பொருள்களின் விலை சற்று உயர்ந்ததே இதற்குக் காரணம்.
இருப்பினும், இது இந்திய ரிசர்வ் வங்கியின் சகிப்புத்தன்மை வரம்பிற்குள் (tolerance band) உட்பட்டு இருப்பதால், மத்திய வங்கியின் வட்டி விகிதம் மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் திருத்தப்பட்ட 1.61% வருடாந்திர சில்லறை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 2.1% என்ற ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பிற்கு ஏற்ப வேகமாக உயர்ந்தது.
அடுத்த மூன்று காலாண்டுகளுக்கு மேல் வட்டி விகிதத்தை 2%-6% சகிப்புத்தன்மை வரம்பை மிஞ்சாமல் பார்க்க இந்தியாவின் மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலான இந்தியா, இந்த நிதியாண்டில் 6.5% வேகத்தில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பொருளியல்களில் தற்போது இந்த விகிதம், ஆக உயர்வாக உள்ளது.
இருப்பினும், குறைந்த பணவீக்கம் நிறுவனங்களின் வருவாய் மற்றும் பங்குச் சந்தைகளைப் பாதித்துள்ளது.
இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரை விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க, மேலும் அழுத்தம் தருகிறது.
தொடர்புடைய செய்திகள்
விலை உயர்வு கட்டுப்பாட்டில் இருப்பதாலும் அமெரிக்க மத்திய வங்கி போன்ற முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கத் தயாராக இருப்பதாலும் இந்த ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மேலும் தளர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மத்திய வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழு, அக்டோபர் 1ல் தனது அடுத்த முடிவை அறிவிக்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கமும் உணவுப் பணவீக்கமும் அதிகரித்ததற்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே ஏற்பட்ட காய்கறிகள், இறைச்சி, மீன், எண்ணெய், முட்டை, பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணம் என அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை, கடந்தாண்டு அதே மாதத்தின் விலையைக் காட்டிலும் 0.69% குறைந்துள்ளது.
மூலாதாரப் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 4.1% ஆகப் பதிவானது. இது, ஜூலை மாதத்தில் பதிவான 4%-4.12% ஆக இருந்ததை விட குறைவு
உணவுப் பொருள்களுக்கும் நூற்றுக்கணக்கான வீட்டுப்பொருள்களுக்குமான வரிக் குறைப்புகள் வரும் மாதங்களில் பணவீக்கத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பொருள் சேவை வரியை மறுசீரமைப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் அதிகரித்துள்ளது.
பொருள் சேவை வரி முறையை ஈரடுக்கு (5% மற்றும் 18%) முறைக்கு மாற்றுவது, இந்தச் சீரமைப்பில் அடங்கும்.
நவராத்திரி காலம் முன்னிட்டு செப்டம்பர் 22க்குப் பிறகு பொருள்களுக்கான தேவையும் தளவாட நடவடிக்கையும் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.