எருதாக மாறி நிலத்தை உழுத விவசாயி; கடனை செலுத்திய அமைச்சர்

எருதாக மாறி நிலத்தை உழுத விவசாயி; கடனை செலுத்திய அமைச்சர்

படம்: இந்திய ஊடகம்

07 Jul 2025 - 4:38 pm

1 mins read

லத்தூர்: மகா​ராஷ்டிராவின் லத்​தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​த விவசாயியான 75 வயது அம்​ப​தாஸ் பவாருக்கு 2.5 ஏக்​கர் நிலம் இருக்கிறது.

அந்த நிலப்பகுதியை எருதோ அல்லது இயந்திரம் வைத்தோ உழுது பயிர் செய்ய அவரிடம் வசதி இல்லை. அதனால், தானே எருதாக மாறி மனைவியின் உதவியுடன் பல ஆண்டுகளாக மரக்கலப்பையைக் கொண்டு அவர் நிலத்தை உழுது வந்தார்.

மேலும், தான் வாங்கிய விவசாயக் கடனையும் அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் அவர் வாடியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், மனைவியின் உதவியுடன் நிலத்தை முதியவர் அம்பதாஸ் உழுவது தொடர்பான காணொளி வெளியானது. கடந்த வாரம் வெளியான அக்காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலர் அவருடைய வறுமை நிலையை எண்ணி வருந்தினர்.

இதனையடுத்து மகா​ராஷ்டிர கூட்​டுறவு அமைச்​சர் பாபா​சாகேப் பாட்​டில் ஜூலை 5ஆம் தேதி ​அம்​ப​தாஸ் பவார் வீட்​டுக்குச் சென்​றார்.

அந்த மூத்த விவசாயி வாங்கிய விவசாயக் கடனான ரூ.42,500ஐ செலுத்திய அமைச்சர், அதற்கான சான்​றிதழையும் அம்பதாசுக்கு வழங்​கும்​படி​யும் உத்​தர​விட்​டார்.

முன்​ன​தாக, ஜூலை 4ஆம் தேதி லத்​தூர் மாவட்ட ‘கிரந்​தி​காரி ஷேத்​கரி சங்​காதன்’ என்ற அமைப்பு இரு மாடுகளை அவருக்குப் பரி​சாக வழங்​கியது.

குறிப்புச் சொற்கள்
விவசாயிஅமைச்சர்கடன்