தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஐஎஸ்எஃப் முக்கியப் பணிகளில் பெண் கமாண்டோ குழு

2 mins read
cff0a77e-f1ae-4c3b-9c2c-9a6797f2a3a6
பெண் அதிரடி வீரர்களுக்கு எதையும் சமாளிக்கக்கூடிய திறன்களைப் பெற கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: சிஐஎஸ்எஃப் என்று அழைக்கப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் முதல் முறை​யாக பெண் அதிரடிக் குழு​வினரை முக்​கிய பணிகளில் ஈடு​படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அக்குழுவுக்குக் கடுமையான பயிற்சிகளை வழங்கி பிரச்சினைகள் அதிகமுள்ள விமான நிலை​யங்​கள் உள்ளிட்ட பகு​தி​களில் பெண் அதிரடிக் குழு​வினரைப் பணி​யமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை தெரிவிக்கிறது.

இதற்​காக 100 பெண் சிஐஎஸ்​எஃப் வீரர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆயுதப் பயிற்​சி, தீயணைப்புப் பயிற்​சி, ஓட்​டம், காடு​களில் உயிர் வாழும் பயிற்​சி, நெருக்​கடி​யான தருணங்​களில் சாமர்த்​தி​ய​மாக முடி​வெடுப்​பது, குழுப் பணியைச் சோ​திக்க வடிவ​மைக்​கப்​பட்ட 48 மணி நேர நம்​பிக்​கையை வளர்க்​கும் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

மத்​தியப் பிரதேசத்​தின் பர்​வாஹா​வில் உள்ள வட்டாரப் பயிற்சி மையத்​தில் (ஆர்​டிசி) பெண் கமாண்​டோக்​களுக்​கான இந்தப் பயிற்​சிகள் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்​ளன.

பல விமான நிலை​யங்​களில் தற்​போது பணிமயர்த்​தப்​பட்​டுள்ள 30 பெண்​களைக் கொண்ட முதல் குழு ஆகஸ்ட் 11 முதல் அக்​டோபர் 2025 வரை பயிற்சி பெறும்.

இதையடுத்து இரண்​டாவது பெண் அதிரடிக் குழு இவ்வாண்டு அக்​டோபர் 6 முதல் நவம்​பர் 29 வரை பயிற்​சி​யில் இருக்​கும். குறைந்​தது 100 பெண் கமாண்​டோக்​களுக்கு இது​போன்று பயிற்​சிகள் அளிக்​கப்​படவிருக்கிறது.

இது குறித்து பேசிய சிஐஎஸ்​எஃப் செய்​தித் தொடர்​பாளர், “சிஐஎஸ்​எஃப் முக்​கியப் பணி​களில் பெண்​களைச் சேர்ப்​பது பாலினச் சமத்​து​வத்தை நோக்​கிய முதல்​படி​யாக அமை​யும். மேலும், சிஐஎஸ்​எஃப் படை​யில் பெண்​களின் பங்​களிப்பை 10 விழுக்காட்டுக்கு உயர்த்த வேண்​டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை வேக​மாக அடைய இது உதவும்,​’’ என்​றார்​.

குறிப்புச் சொற்கள்