கெட்ட வார்த்தைகளைப் பேசினால் அபராதம் அல்லது கட்​டா​யத் துப்​புர​வுப் பணி

கெட்ட வார்த்தைகளைப் பேசினால் அபராதம் அல்லது கட்​டா​யத் துப்​புர​வுப் பணி

1 mins read
f47e878f-ad2f-4776-9999-4c974eeb4eb3
கிராமத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி. - படம்: இந்து தமிழ் திசை

போபால்: கெட்ட வார்த்தை பேசினால் அபராதம் அல்லது கட்​டா​யத் துப்​புர​வுப் பணி என்ற கிராம பஞ்சாயத்தின் விதிமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மத்​திய பிரதேசத்​தின் பர்​ஹான்​பூர் மாவட்​டத்தில் உள்ளது போர்​சர் கிராமம். இந்தக் கிராமத்தில் சிறுவர்கள் அவ்வப்போது சண்டையிடும்போது பயன்படுத்தும் தகாத வார்த்தைகள் சிலசமயம் பெரும் மோதல்களுக்கு காரணமாகிவிடுகிறது.

இதையடுத்து, தரக்​குறை​வான வார்த்​தைகளைப் பேசி​னால் ரூ.500 அபராதம் அல்​லது ஒரு மணி நேரம் கட்​டா​யத் துப்​புர​வுப் பணி என்ற உத்தரவை கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்தது.

இதற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் கிராம மக்கள் வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துவதாகவும் கிராமத் துணைத் தலைவர் வினோத் ஷிண்டே தெரிவித்தார்.

அண்டை கிராமத்தினரும் இந்தப் புதிய நடைமுறையைப் பாராட்டி உள்ளனர் என்றும் மத்தியப் பிரதேசத்தில் இப்படிப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அஷ்வின் பாட்டீல் என்ற இளையர் கூறியுள்ளார்.

‘வசைமொழி இல்லா கிராமம்’ என்ற முழக்கத்துடன் இந்த இளையர் முன்வைத்த யோசனைதான் தற்போது இக்கிராமத்தில் நடைமுறையில் உள்ளது.

“முன்பு தாய்மார்கள், சகோ​தரி​களுக்கு எதி​ராகப் பலர் இழி​வான சொற்​களை அடிக்​கடி பயன்​படுத்​தினர். இப்​போது, அவ்​வாறு செய்​பவர்​கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்​டும் அல்​லது கிராமத்​தில் ஒரு மணி நேரம் துப்​புர​வுப் பணி செய்ய வேண்​டும். இந்த உத்தரவு நேர்​மறை​யான விளைவு​களை ஏற்​படுத்​தி​யுள்​ளது,” என்கிறார் அஷ்வின் பாட்டீல்.

குறிப்புச் சொற்கள்