கொச்சி: இந்தியாவில் முதன்முறையாக ஆய்வகத்தில் செயற்கை முறையில் மீன் இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கேர்ள மாநிலம், கொச்சியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (ஐசிஏஆர்) - மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் இந்த முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கடலுணவிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்தேவையை ஈடுகட்டும் நோக்குடன் செயற்கை முறையில் மீன் இறைச்சியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு கொண்டுள்ளது.
மீனிலிருந்து சில குறிப்பிட்ட குறிப்பிட்ட உயிரணுக்களைத் தனிமைப்படுத்தி, பின்னர் அவற்றை ஆய்வகத்தில் வளர்த்து, செயற்கையாக மீன் இறைச்சியை உருவாக்கியாக மீன்வள ஆராய்ச்சி நிலையம் ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.
செயற்கை மீன் இறைச்சி என்றாலும், அதன் சுவை, அமைப்பு, ஊட்டச்சத்து ஆகியவை இயற்கையாகக் கிடைக்கும் மீன் போன்றே இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து, செயற்கை முறையில் மீன் இறைச்சி உருவாக்குவது தொடர்பான கூட்டு ஆராய்ச்சி உடன்பாட்டில் மீன்வள ஆராய்ச்சி நிலையமும் ‘நீட் மீட் பயோடெக்’ எனும் தனியார் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.