பீகாரில் முதன்முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி முதல்வரானார்

பீகாரில் முதன்முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி முதல்வரானார்

1 mins read
4a785abc-4ca0-4ece-bbeb-21d6efcd7a60
புதிய முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு வாழ்த்து தெரிவித்தார் நிதிஷ்குமார். - படம்: பிடிஐ

பாட்னா: பீகார் மாநிலத்​தில் முதன்​முறை​யாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக சாம்​ராட் சவுத்ரி பதவியேற்றார். இதற்கு முன்பு அவர் துணை முதல்வராகப் பொறுப்பில் இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றிபெற்று ஆட்​சி​யைத் தக்​க​வைத்​தது.

அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவர் பத்தாவது முறையாக முதல்வராகத் தேர்வான நிலையில், திடீர் திருப்பமாக நாடாளுமன்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டுத் தேர்வானார். இதையடுத்து கடந்த மாதம் தனது முதல்​வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

இதையடுத்து பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதல்வராகப் பொறுப்பில் இருந்த சாம்​ராட் சவுத்ரி சட்​டமன்ற பாஜக குழுத் தலை​வ​ராக ஒரு​மன​தாகத் தேர்வானார். அவருக்கு நிதிஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து புதன்கிழமை (ஏப்ரல் 15) புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார்.

பீகார் மாநிலத்​தில் முதன்முறை​யாக பாஜகவைச் சேர்ந்த ஒரு​வர் முதல்​வ​ராகப் பதவி​ ஏற்றுள்ளார்.

முன்னதாக நிதிஷ்குமாரின் பதவி விலகலை அடுத்து, அம்மாநில ஆளுநர் சையத் அடா ஹஸ்​னைனைச் சந்​தித்து ஆட்​சி​யமைக்க உரிமை கோரி​னார் சாம்​ராட் சவுத்​ரி.

குறிப்புச் சொற்கள்