விமானத்தில் ‘பீடி’ புகைத்த ஆடவர்; தரையிறங்கியதும் கைது

இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது பீடியை பற்றவைத்து புகைத்துள்ளார்.

சம்பவம் அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற அக்காசா விமானத்தில் நடந்தது.

விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஆடவர் கைது செய்யப்பட்டர்.

கைது செய்யப்பட்ட ஆடவரின் பெயர் பிரவீன் குமார். அவருக்கு 56 வயது. பிரவீன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி, அவர் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

விமானத்தில் புகைக்கக்கூடாது என்பது தமக்கு தெரியாது, ரயிலில் உள்ள கழிவறைகளில் புகைப்பது போல் விமானத்தில் செய்துவிட்டதாக பிரவீன் கூறினார்.

சகபயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் பெங்களூரு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு விமான நிலையத்தில் பீடி புகைத்ததற்காக கைது செய்யப்பட்ட முதல் நபரும் இவரே.

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை மீறி எப்படி ஆடவர்  பீடி மற்றும் தீக்குச்சிகளை விமானத்திற்குள் கொண்டு வந்தார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!