நடுவானில் தீ; கோழிக்கோடு செல்லவிருந்த விமானம் மீண்டும் அபுதாயில் தரையிறக்கம்

கோழிக்கோடு: அபுதாபியில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததால் விமானம் மீண்டும் அபுதாபிக்குத் திருப்பிவிடப்பட்டது.  

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது. 

விமானம் 1,000 அடி உயரத்தில் பறந்தபோது இயந்திரத்தில் தீப்பிடித்ததைக் விமானி கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது. 

விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்.  

முன்னதாக, கடந்த ஜனவரி 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 45 நிமிடங்களிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!