நச்சு உணவு சம்பவம்; மும்பையில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி

நச்சு உணவு சம்பவம்; மும்பையில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி

1 mins read
5ae08cbe-e2f5-426e-95f8-496bad00e07d
தர்​பூசணி சாப்​பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயி​ரிழந்​த​தால் அதை வாங்குவதை பொது​மக்​கள்​ தவிர்ப்​ப​தாகக்​ கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அப்​துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்​ரின் (35), மகள்​கள் ஆயிஷா (16) மற்​றும் ஜைனப் (13) ஆகியோர் மாண்டனர்.

அவர்களின் இறப்புக்குக் காரணம் நச்சு உணவு என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை இரவு அவர்கள் நால்வரும் உறவினர்​கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உணவு உண்டனர். பிறகு அவர்கள் தர்பூசணி பழம் சாப்பிட்டனர்.

அன்று இரவு நேரத்திலே நால்வருக்கும் கடுமை​யான வாந்தி மற்​றும் வயிற்றுப்​போக்கு ஏற்​பட்​டது. சிகிச்சைப் பலனின்றி சில மணி நேரங்​களி​லேயே அவர்கள் உயி​ரிழந்​தனர்.

உயி​ரிழந்​தவர்கள் சடலங்களை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். மருத்துவர்களின் அறிக்கையில் உணவு நச்சு காரணமாக நால்வருக்கும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், நவிமும்பை வேளாண் உற்​பத்தி சந்​தை​யில் தர்பூசணிக்கான தேவை திடீரெனச் சரிந்​துள்​ளது.

ஒரு கிலோ தர்​பூசணி ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்கப்​படு​வ​தால், விவ​சா​யிகள் பெரும் நஷ்டத்​தைச் சந்தித்துள்ளனர்.

பொது​வாக, தர்​பூசணியின் மொத்த விற்​பனை விலை ரூ.10 முதல் ரூ.35 ஆகவும், சில்லறை விற்​பனை விலை ரூ.30 முதல் ரூ.100 வரை​யிலும் இருக்​கும்.

தர்​பூசணி சாப்​பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயி​ரிழந்​த​தால் அதை வாங்கு​வதை பொது​மக்​கள்​ தவிர்ப்​ப​தாகக்​ கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்