புதுடெல்லி: அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்தியர்களான கிஷோர் திவன், 89, ஆஷா திவன், 85, ஷைலேஷ் திவன், 86, கீதா திவன், 84 ஆகிய நான்கு பேரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தனர்.
கடந்த வாரம் மேற்கு வெர்ஜினியாவின் மார்ஷல் மாவட்டத்தில் உள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆஃப் கோல்டு என்ற புகழ்பெற்ற கோயிலுக்கு அவர்கள் காரில் சென்றனர்.
இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி முதல் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
ஓஹியோ மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தியதில் பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது தெரிய வந்தது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் விபத்து நடந்துள்ளது.
அங்கிருந்து அந்த நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கடைசியாக அந்தக் குடும்பத்தினர் பென்சில்வேனியாவில் உள்ள பர்கர் கிங் கடைக்குச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் நால்வரில் இருவர் உணவகத்தில் நுழைவது பதிவாகி இருந்தது. கடன் அட்டையும் அங்குதான் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வாகனம் பிட்ஸ்பர்க் நோக்கி இண்டர்ஸ்டேட் 79ல் சென்றதை கேமராக்கள் காட்டின.
இதையடுத்து காவல்துறை அவர்கள் சென்ற வழியில் கார் விபத்துக்குள்ளானதைக் கண்டுபிடித்தனர்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

