இந்திய ஆலையில் ஓராண்டில் 2 கோடி ஐபோன்களைத் தயாரிக்க இலக்கு

தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவின் பெங்களூரில் அமையும் ஆலையில் ஐபோன்களைத் தயாரிக்கவிருக்கிறது.

அந்த ரூ.13,600 கோடித் திட்டத்தின்மூலம் 50,000 வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று கட்டங்களாக அந்த ஆலைப் பணிகளை முடிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. மூன்று கட்டப் பணிகள் முடிந்ததும் அப்புதிய ஆலை ஆண்டிற்கு 2 கோடி ஐபோன்களைத் தயாரிக்க இலக்கு கொண்டுள்ளது.

தேவனஹள்ளியில் அமைக்கப்படும் அந்த ஆலைக்காக கர்நாடக மாநில அரசாங்கம் 300 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி அந்த நிலப்பகுதி ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பதவியேற்று சில வாரங்களே ஆகின்றன.

இந்நிலையில், அந்த ஆலையில் பணியமர்த்தப்படவிருக்கும் ஊழியர்களுக்கு என்னென்ன திறன்களும் தேர்ச்சிகளும் தேவை என்பது குறித்து விரிவான அறிக்கை வழங்கும்படி மாநில அரசு ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

அதன்படி, அங்கு பணிபுரிய தகுதிபெற்றிருக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும் என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!