ஈரானில் பணத்துக்காக இந்தியர்களைக் கடத்தும் கும்பல்

2 mins read
ca7245fb-cd99-444e-a4a5-c06405dc3fe1
கடத்தல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: ஈரானுக்குப் பணி நிமித்தமாகச் செல்​லும் இந்​தி​யர்​களை அந்​நாட்​டில் உள்ள ஆள் கடத்​தல் கும்​பல் பணத்துக்காகக் கடத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியர்களைக் கடத்திய பிறகு, அவர்​களை விடுவிக்க கணிச​மான தொகையை அளிக்க வேண்​டும் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தார் மிரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இந்​திய குடிமக்​களும் அனைவருக்கும் வேலை​வாய்ப்பு வாக்​குறு​தி​கள் அல்​லது சலுகைகள் குறித்து அதிக விழிப்​புணர்​வு இருக்க வேண்​டும். குறிப்​பாக, சுற்​றுலா செல்லும் இந்தியர்களுக்கு மட்​டும்​தான் விசா இல்​லாத அனு​ம​தியை ஈரான் அரசு அனு​ம​திக்​கிறது. சுற்​றுலா தவிர்த்த மற்ற வர்த்​தகம், வேலை போன்ற விஷ​யங்​களுக்கு கண்​டிப்​பாக விசா அவசி​யம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்​களுக்​கும் குற்ற கும்​பல்​களுக்​கும் தொடர்பு இருக்​கலாம். இந்​தி​யர்​கள் மோசடி​யில் சிக்கி கொள்ள வேண்​டாம்’’ என்று இந்திய வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்​லி​யில் உள்ள நரேலா​வைச் சேர்ந்த 26 வயது ஹிமான்ஷு மாத்​தூர் என்​பவர் ஈரானில் கடத்​தப்​பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகச் செய்​தி​கள் வெளி​யாகின. மாத்​தூரிடம் ஆஸ்​திரேலிய விசா​வில் கப்​பல்​களில் வேலை எளி​தில் கிடைப்​ப​தாக அமன் ரதி என்​பவர் ஆசை காட்​டி​யுள்​ளார். அதற்​காகவே நொய்​டா​வில் இருக்கும் தனி​யார் கல்வி நிறு​வனத்​தில் கப்​பல் துறை​யில் பட்டயக் கல்வியை மாத்தூர் முடித்தார். பின்​னர் தனது சகோ​தரர் மூலம் ரூ.12 லட்​சம் செலுத்தி ஈரானுக்கு அமன் ரதி​யுடன் பயணம் செய்​தார்.

ஈரானில் உள்ள சபாஹாரில், மாத்​தூருடன் அமன் ரதி​யும் அவர்​களது முகவருடன் தொடர்​புடைய ஒரு கும்​பலால் கடத்​தப்​பட்​டனர். ரூ.1 கோடி கேட்டு மிரட்​டிய​வர்​களிடம் பேசி ரூ.20 லட்​சம் அளித்த பின் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தியா திரும்​பிய பிறகு, அவர்​கள் செப்டம்பர் 7ஆம் தேதி டெல்லி காவல்துறையில் புகார் செய்​தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்