பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது

1 mins read
cac3756d-eed8-428c-8e8e-cd3521b2f3b8
கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் தேசிய விருதை வழங்கி சிறப்பித்தார். - படம்: ஏஎஃப்பி

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாடு உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்குச் செல்ல எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.

”தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவம் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

“இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும், நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பங்களிக்கும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.

இந்தப் பயணத்தில் தொடர்ந்து, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு திரு மோடி செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்