தந்தையிடம் பரிசுச்சீட்டு வாங்கிய மகளுக்கே முதல் பரிசு

அரூர் (கேரளா): தம் தந்தையார் திரு அகஸ்டின் நடத்திவரும் கடையிலிருந்து எப்போதாவது பரிசுச்சீட்டு வாங்குவார் திருவாட்டி ஆஷ்லி.

அப்படி அண்மையில் தாம் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் (S$123,600) விழ, ஆஷ்லி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.

அத்துடன், முதல் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை விற்ற திரு அகஸ்டினுக்கும் அதற்கான தரகுத்தொகை கிடைக்க, குடும்பத்தினர்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், அரூரில் கடந்த பத்தாண்டுகளாகப் பரிசுச்சீட்டு விற்பனைக் கடையை நடத்தி வருகிறார் திரு அகஸ்டின். அவருக்கு மூன்று மகள்கள். இரண்டாவது மகளான திருவாட்டி ஆஷ்லி அங்குள்ள ஓர் அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிகிறார்.

திருவாட்டி ஆஷ்லிக்கு பினீஷ் என்ற கணவரும் ஆதிஷ் என்ற மகனும் உள்ளனர்.

தங்களது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது திருவாட்டி ஆஷ்லியின் கனவு. இப்போது அக்கனவை நனவாக்குவதற்கான வழி பிறந்துள்ளது என்ற அவர், தம் சகோதரிகளுக்கும் உதவ விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!